சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

Month: கார்த்திகை 2019

வங்கி நடைமுறை தொடர்பான வழிப்புணர்வு’

17,20,24.08.2019 ஆகிய திகதிகளில் காரைதீவு பிரதேசத்தில் HNB வங்கி ஊழியர் திருமதி.யாழினி அவர்களைக் கொண்டு வங்கி நடைமுறைகள், வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக 3 விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளன. இதில் 123பேர் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க

“ மாணவர்களின் திறனை விருத்தி செய்வதில் பெற்றோரின்பங்களிப்பு” தொடர்பான விழிப்புணர்வு.

26.08.2019ம் திகதி கல்முனை பிரதேசத்தில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.யு.ஆ.பஸ்லீன் அவர்களைக் கொண்டு 35 பேருக்கு மாணவர்களின் திறனை விருத்தி செய்வதில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பானவிழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது
மேலும் படிக்க

“ சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டமிடல்” தொடர்பான விழிப்புணர்வு.

10,07.2019ம் திகதி பொத்துவில் பிரதேச குண்டுமடு கிளையில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி- ஜீவதர்சினி கருணாகரன் அவர்களைக் கொண்டு சுயதொழில் முயற்சியாளர்கள் 31 பேருக்கு வியாபாரத்திட்டமிடல் தொடர்பானவிழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

28.7.20219 அன்று “குழந்தைகள் பாதுகாப்பு” பற்றிய விழிப்புணர்வு

28.07.2019ம் திகதி காரைதீவு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.ச.சிவலோஜினி அவர்களைக் கொண்டு ஆதிசிவன் அறநெறி பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கும், விஸ்ணு அறநெறி பாடசாலை மாணவர்கள் 45 பேருக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

22.07.2019 அன்று குழந்தை பராமரிப்பு உளவியல் ஆலோசனைக்கான வழிகாட்டுதல்

பிள்ளை பராமரிப்பின்போது பெற்றோர்களின் கோபம், மற்றும் செயற்பாடுகள் காரணமாக பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய உளநலப் பாதிப்புக்கள் குறித்து உளநல ஆலோசகர் திருமதியு.சு.பௌமியாஅவர்களைக்கொண்டு 22.07.2019ம ; திகதி கல்முனைப் பிரதேசத்தில் பெரியநீலாவணை கிளையில் 25பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

பிள்ளைகளின் உயர்கல்வி, தொழில் பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு.

28.05.2019ம் திகதி கல்முனைப் பிரதேசத்தில் பிள்ளைகளின் உயர் கல்வி தொடர்பாகவும் தொழிற்பயிற்சிகள் தொடர்பாகவும். திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.பஸ்லீன் அவர்களைக் கொண்டு 35பேருக்கு வழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது
மேலும் படிக்க

2019 ஆம் ஆண்டு அரசின் உதவியை எவ்வாறு பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு

17,19.06.2019ம் திகதிகளில் காரைதீவு பிரதேசத்தில் அரச உதவிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பாக SSO ஆச.மு.குணரெட்ணம் அவர்களைக் கொண்டு 125 பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

ஜூன் 25 அன்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு 47 பங்கேற்பாளர்களுக்கு நடைபெற்றது

25.06.2019ம் திகதி சம்மாந்துறை பிரதேசத்தில் புகைத்தல் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக சமூக சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் Mrs.ஜெகநாதன், RDO Mrs.ரசிட் முகமட் அவர்களைக் கொண்டு 47பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது
மேலும் படிக்க

“புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல்” தொடர்பான வழிப்புணர்வு.

20.06.2019ம் திகதி கல்முனைப் பிரதேசத்தில் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குதலும், ஊக்கமளித்தலும் தொடர்பாக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ராகினி, விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.ச.ஜெயந்தன் அவர்களைக்கொண்டு 45பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

SWOAD அமைப்பு கிராமங்களில் 36 விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தியது.

கிராம மட்டத்தில் துரைசார் நிபுணர்களை அழைத்து அவர்களினால் வழங்கப்படும் சேவைகள் குறித்தும், அவற்றை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் குறித்தும் விப்புணர்வுகருத்தரங்குகள் சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனூடாக கிராம மட்டங்களில் அடையாளம் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு இலகுவில் துறைசார் உத்தியோகத்தர்களை அணுகி தீர்வுகாண்பதற்கும், அவர்களுடனான சிறந்த தொடர்பை ஏற்படுத்திகொள்ளக்கூடியதற்குமான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமைப்பின் செயற்பாட்டு பிரதேசங்களான 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வருடம் 36 விழிப்புணர்வு கருந்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் இதில்…
மேலும் படிக்க